சிறந்த தமிழறிஞரும், புகழ்பெற்ற சொற்பொழிவாளருமான முனைவர் அரு. கோபாலன் (80), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் ஆர்வலர்களிடையே ‘அருகோ’ என்று சுருக்கமாக அன்போடு அழைக்கப்படும் இவர், தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அவர்களது உரிமைக்காகப் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்தவர். தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றதற்காகப் பலமுறை சிறைவாசம் சென்றவர்.
