தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் திருச்சியில் தன்னோட சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து TVK சார்பாக அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதில் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் விஜய் கட்சியில் செங்கோட்டையன், அடுத்ததாக நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளது TVK விற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டில், தவெக தொண்டர்களிடையே, தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் டைமிங், ரைமிங்கில் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பேசிய அவர், “நீங்கள் பயப்பட தேவையில்லை. யார் வேண்டுமானாலும் உங்களிடம் வாக்குகளை சேகரிக்க வருவார்கள். அவர்களுக்கு வணக்கத்தை போடுங்கள், வாக்குகளை விஜய்க்கு போடுங்கள்” என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
