ஈரோடு பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி சேலத்தில் விஜய் பிரம்மாண்ட பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஈரோட்டில் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்ற பரப்புரை, கொங்கு பகுதியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டமான சேலத்தில்,செங்கோட்டையன் விஜய்க்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கொங்கு மண்டலத்தை தனது பலமாகப் பார்க்கும் அதிமுகவிற்கு, விஜய்யின் இந்த சேலம் வருகை ஒரு சவாலாகவும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
