Categories: சினிமா

நடிப்பிற்கு முழுக்கு போட்டு மீண்டும் டைரக்ஷனில் இறங்கிய செல்வராகவன்.. அந்த கதையை தீவிரமா ரெடி பண்றாராம்..!!

Spread the love

பிரபல இயக்குனரான செல்வராகவன் கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார்.

பின்னர் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தை இயக்கி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களையும் செல்வராகவும் இயக்கியுள்ளார். தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் செல்வராகவனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.

ராயன் படத்திற்கு பிறகு அவருக்கு அடுத்த மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டாராம் செல்வராகவன். அதற்கு காரணம் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களை இயக்க செல்வராகவன் ஆர்வத்தோடு கதையை தயார் செய்கிறாராம். ஏற்கனவே செல்வ ராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ரிலீசான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை இப்போது எடுத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது 50 சதவீத படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாம். மீதமுள்ள 50 சதவீதம் தான் எடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் நடிப்பதை தவிர்த்து விட்டு இயக்குனராக திரையுலகில் தனக்கு கிடைத்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள செல்வராகவன் முயற்சி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

admin

Recent Posts

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

5 minutes ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

9 minutes ago

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

50 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

50 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

1 மணத்தியாலம் ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

1 மணத்தியாலம் ago