இது லிஸ்ட்லயே இல்லையே..! திமுக, அதிமுகவிடம் ஆதரவு கேட்கும் நாதக சீனியர்கள்..? அம்பாசமுத்திரத்தில் சீமானை நிறுத்த அதிரடி பிளான்..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளின் இடைத்தேர்தலில், மக்களை நம்பி தனித்துப் போட்டியிடலாம் என்று சீமான் முதலில் கூறியிருந்தார். இருப்பினும், தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெறுவது கடினம் என்பதால், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலைப் புறக்கணித்துவிட்டு, அம்பாசமுத்திரத்தில் மட்டும் சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்த அக்கட்சியின் சீனியர்கள் விரும்புகின்றனர்.

இதற்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சீமானுக்கு ஆதரவு திரட்டலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இடைத்தேர்தல் களத்தில் தனித்துவமானப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை மற்ற கட்சிகளின் ஆதரவோடு சீமானை களம் இறக்க யோசனை செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.