பில்டர்கள் வீட்டை ஒப்படைப்பதில் தாமதம் செய்தால், வங்கிகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களே கடன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது. குறிப்பாக ‘சப்வென்ஷன்’ திட்டத்தின் கீழ் வீடு வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர்களிடம், வீடு ஒப்படைக்கப்படும் வரை வங்கிகள் இ.எம்.ஐ வசூலிக்கக் கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
முத்தரப்பு ஒப்பந்தப்படி, வீடு ஒப்படைக்கப்படும் வரை பில்டர்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில், வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், தேக்கமடைந்த வீட்டுத் திட்டங்களில் ஏமாந்த வாடிக்கையாளர்களுக்கான ‘கடன் நிவாரண திட்டம்’ குறித்து பதிலளிக்க, உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் வி. மோகன் அமர்வு, நுகர்வோர் ஏமாறுவதைத் தடுக்க, முழு கடன் இழப்பையும் வங்கிகளும், பில்டர்களும் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு சாதகமான, வீடு வாங்குவோர் ஏமாறுவதைத் தடுக்கும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.
