“என்னையும் கல்யாணம் பண்ணிக்கோ”… 10 வருட லிவ்-இன் உறவு… நிர்வாணமாக்கி, முகத்தைச் சிதைத்த காதலன்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை அவரது காதலனே தனது இரண்டாவது மனைவி மற்றும் மாமனாருடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பணியாற்றி வந்த விஜய் குமார் சாஹ்னி என்பவருக்கும், பிரியா ஷெட்டி (35) என்பவருக்கும் இடையே கடந்த 2012-ம் ஆண்டு முதல் உறவு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், விஜய் குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து 2014-ல் சந்தியா என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார்.

தனது காதலனுக்குத் திருமணமாகிவிட்டதை அறிந்த பிரியா, தன்னை முறைப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு விஜய்க்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய், பிரியாவைத் தீர்த்துக்கட்ட ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டினார். கடந்த ஜனவரி 26-ம் தேதி, விஜய் தனது மனைவி சந்தியா மற்றும் பிரியாவை மும்பையிலிருந்து கோரக்பூருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ஜனவரி 29-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த பிரியாவை விஜய்யும் அவரது மனைவியும் இணைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட பிரியாவின் அடையாளத்தை மறைப்பதற்காக, கொலையாளிகள் அவரது முகத்தைச் சிதைத்து, உடலை நிர்வாணமாக்கி பாலம் ஒன்றின் அடியில் வீசிச் சென்றுள்ளனர். ஆளில்லாத இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து விசாரணை நடத்திய கோரக்பூர் காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவரைப் பிடித்து விசாரித்தபோது இந்த கொடூரக் கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தச் சதிச் செயலில் நேரடியாக ஈடுபட்ட விஜய் குமார், அவரது இரண்டாவது மனைவி சந்தியா மற்றும் இந்தக் கொலைக்குத் துணையாக இருந்த விஜய்யின் மாமனார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு பெண்ணை ஏமாற்றி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உறவில் இருந்துவிட்டு, இறுதியில் மிகக் கொடூரமான முறையில் அவரைக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

5 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

5 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

6 மணத்தியாலங்கள் ago