BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு… காலையிலேயே வந்த அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான மறுதேர்வு வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்குவதற்காக இன்று (மே 23) முதல் திறக்கப்படவுள்ளன. வரும் ஜூன் 11-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கோடைக்காலப் பயிற்சி நாள்களில், வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி செய்து தருவதோடு, அவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க மதிய உணவு மற்றும் காலை, மாலை சிற்றுண்டிகளையும் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த உடனடி மற்றும் முறையான வழிகாட்டுதல், மறுதேர்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.