தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, கோவை, திண்டுக்கல், குமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருவள்ளூர், நெல்லை, திருப்பூர், தி.மலை, விழுப்புரம், விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளையும் 12 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தது வருகிறார்கள்.
