“அம்மா.. என்னை காப்பாத்துங்க!”… பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி கவலைக்கிடம்… தருமபுரி நடுக்க வைக்கும் விபத்து…!!!!

Spread the love

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சுமார் 90 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளியின் சுற்றுச்சுவர் நீண்ட நாட்களாகவே பலவீனமடைந்து விரிசல்களுடன் காணப்பட்டுள்ளது. இது குறித்துப் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 25-ம் தேதி காலை பள்ளி நுழைவு வாயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த தண்டபாணி – அபிராமி தம்பதியரின் 3 வயது மகள் தாரிகா மீது, திடீரெனப் பள்ளியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிறுமியின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதி நசுங்கிப் பலத்த காயமடைந்ததையடுத்து, அவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகளின் அலட்சியமே ஒரு பச்சிளம் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஊர் கவுண்டர் பழனிமுத்து, பள்ளி வேலை நாட்களில் இது போன்ற விபத்து நடந்திருந்தால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரிகளின் மெத்தனப் போக்கால்தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாகவும், இதற்குத் தமிழக அரசு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Muthu Mani

Recent Posts

இரட்டை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பறிபோன உயிர்… தவறான ஊசியால் துடிதுடித்த தாய்.. தனியார் மருத்துவமனையின் பகீர் அலட்சியம்..!!

டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…

4 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?”… தந்தையின் ஜீப்… மகனின் குத்தாட்டம்!… போலீஸ் ஜீப்பில் ஆடிய இளைஞருக்கு காத்திருந்த ட்விஸ்ட்… ஒரு ரீல்ஸால் சிதைந்த கனவு…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய இளைஞர் ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஹாதேய்…

5 minutes ago

“செத்தாலும் என் புள்ளையை விடமாட்டேன்” ஆற்றில் மகனை நெஞ்சோடு சேர்த்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்.. கலங்கும் இணையதளம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில், உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒன்றையொருவர் இறுக்கமாகக்…

11 minutes ago

வாந்தி வருதுப்பா..! சாக்கடை நீரை உடலில் ஊற்றிக்கொண்டு உணவருந்திய பிரபலம்.. இது நகைச்சுவையா..? இல்ல பைத்தியக்காரத்தனமா..? வைரலாகும் பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் 'புனீத் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பிரகாஷ் குமார், சாக்கடை நீரில் குளித்து, அதில் உணவை நனைத்து…

19 minutes ago

என் பேமிலியை போட்டோ எடுத்தா… அடுத்த நிமிஷம் இதுதான் நடக்கும்… ரசிகரை மிரட்டிய ஹென்ரிச் கிளாசென்..!!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…

25 minutes ago

திக் திக்..! மோப்ப நாய் கொடுத்த சிக்னல்.. அதிபர் விருந்தில் நடக்கவிருந்த துப்பாக்கிச் சூடு முறியடிப்பு.. வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்..!!

வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…

30 minutes ago