பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டுக்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் திறனாய்வு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் இடம்பெறுவார்கள்.
தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள மூலமாக தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பதிவு நடைபெற்று வந்த நிலையை அதற்கான கால அவகாசம் ஜனவரி 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஒருநாள் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் மாணவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…
ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…
வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…
கோயம்புத்தூர் பாரதிபுரம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும்…
விசிகவைச் சேர்ந்த பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முகமும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அதிகாலையில் 17 வயது சிறுவன் குபேந்திரன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட…