அதிமுகவின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் போர் கொடி தூக்கியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்தார். விஜயும் அவரை அரவணைத்து அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்கு மறுபக்கம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார். 2026 தேர்தலை முன்னிட்டு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை உறுதி செய்யும் வேலைகளில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளன. அதன்படி அதிமுக கூட்டணியில் மீண்டும் இடம்பெறுவதை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி உறுதி செய்துள்ளது. 2026 தேர்தலை அதிமுக தலைமையில் எதிர்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே புரட்சி பாரதம் பற்றியும் அதிமுகவுடன் கூட்டணி என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…
மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…
புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…
பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…