வடிவேலு சொன்ன ஒரு வசனத்தால் கடுப்பான சரோஜா தேவி…  அப்படி என்ன சொன்னார்? பிரபலம் பகிர்ந்த சம்பவம்!

By vinoth on ஜனவரி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.

இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மகனே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.

   

அதன் பிறகு கவுண்டமணி செந்திலும் மார்க்கெட்டும் டவுன் ஆக வடிவேலுவின் கொடி உயரப் பறந்தது. போட்டிக்கு விவேக் இருந்தாலும் அவரால் வடிவேலு அளவுக்கு உச்சம் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. வடிவேலு சினிமாவில் எந்தளவுக்கு நகைச்சுவையாகத் தன்னைக் காட்டிக்கொள்வாரோ, அந்தளவுக்கு நிஜ வாழ்க்கையில் அவர் கோபக்காரராக இருந்துள்ளார் .

   

அதே போல தன்னுடன் நடிப்பவர்களை ஜாலியாகக் கலாய்ப்பதிலும் வடிவேலு வல்லவர். ஆனால் அதனால் சில சீனியர் நடிகர்கள் கோபப்பட்ட சம்பவமும் உண்டு. அப்படி ஒரு சம்பவத்தை நடிகரும் கதாசிரியருமான ரமேஷ் கண்ணா பகிர்ந்துள்ளார்.

 

ஆதவன் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சரோஜா தேவி நடித்தார். அந்த படத்தில் ஒரு இடத்தில் சரோஜா தேவி பற்றி பேசும் போது  வடிவேலு “மேல ஒரு அம்மா புல் மேக்கப்ல படுத்துத் தூங்கும்” என அவரின் மேக்கப்பை கிண்டல் செய்வார். அந்த வசனத்தைப் படத்தில் பார்த்த சரோஜா தேவி கதாசிரியர் ரமேஷ் கண்ணாவுக்கு போன் செய்து திட்டினாராம்.

அதுபற்றி பேசிய ரமேஷ் கண்ணா “சரோஜா தேவி அம்மா எனக்கு போன் செய்து ‘நான் உங்ககிட்ட சான்ஸ் கேட்டேனா? நீங்களா கூப்டு இப்படி எல்லாம் டயலாக் எல்லாம் போடுறீங்க? எனக் கோபப்பட்டார். நான் அதற்கு ‘வடிவேலு லூசு மாதிரி அந்த டயலாக்க அவனே போட்டுட்டான் அம்மா. அதெல்லாம் ஒன்னும் தப்பில்லை என்றேன். அதற்கு அவர் ‘நான் என்ன மனோரமா மாதிரி காமெடி நடிகையா?’ என்று கோபப்பட்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.