ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருவேறு பாம்பு ஊடுருவல் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரோடு இபிபி நகர் பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவரது வீட்டிற்குள் நள்ளிரவில் சுமார் ஆறு அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. கழிவறையில் பதுங்கியிருந்த அந்த நச்சுப்பாம்பை, பாம்பு பிடி வீரர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாகப் பிடித்தார். நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், நள்ளிரவில் அரங்கேறிய இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை விதைத்துள்ளது.
மற்றொரு புறம், கோவையில் நடந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜீவராஜேஷ் என்ற வாலிபர், கோவை கரியாம்பாளையம் பகுதியில் வேலை தேடி வந்த இடத்தில் தங்கியிருந்தார். தான் தங்கியிருந்த அறையின் அருகே நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று நாய்க்குட்டிகளை கடிக்க முயன்றதைக் கண்டு, அவற்றைக் காப்பாற்ற ஜீவராஜேஷ் போராடியுள்ளார். கம்பால் பாம்பை அடித்த அவர், அது இறந்துவிட்டதா எனச் சோதிக்க அருகில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பாம்பு அவரைத் தாக்கியது.
பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட ஜீவராஜேஷ் உடனடியாக அன்னூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலை தேடி வந்த இடத்தில், வாயில்லா ஜீவன்களைக் காப்பாற்ற முயன்று தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அந்தத் தொழிலாளியின் மரணம் காண்போரை கலங்கச் செய்துள்ளது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக, குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைவது தற்பொழுது அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், பாம்புகளைக் கண்டால் தாங்களாகவே கையாள முயலாமல் அனுபவம் வாய்ந்த மீட்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உயிரிழப்புகளைத் தவிர்க்க விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்த வழிமுறையாகும்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…