நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். வயதாகிவிட்டால் தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் 2025 செப்டம்பரில் 75 வயது அடைவார் என்பதால் அவருடைய இந்த கருத்து எதிர்க்கட்சிகளுக்கு மோடியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி அவர்களுக்கு தற்போது 74 வயதாகிறது. கடந்த மார்ச் மாதம் நாகூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்தபோதும் அவருடைய ஓய்வு குறித்து விவாதங்கள் எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய்ராவத் கூறுகையில், “அத்வானியும், முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களில் 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் கட்டாயப்படுத்தினார்.
இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் முன்னதாக பிரதமர் மோடி 2029 வரை தொடர்ந்து தலைமை தாங்குவார். ஓய்வு வதந்திகளில் எந்த ஒரு உண்மையையும் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மே 2023 அன்று தெளிவுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
