விருமாண்டி படத்தை எடுக்கவே விடல.. எல்லாமே உல்டாவா நடந்துச்சு.. பிரபலம் சொன்ன தகவல்..!!

By Priya Ram on செப்டம்பர் 5, 2024

Spread the love

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு விருமாண்டி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கமல்ஹாசனே எழுதி இயக்கியிருந்தார். அபிராமி, பசுபதி, நெப்போலியன் ஆகியோர் விருமாண்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

   

இந்த நிலையில் ஆர்.எஸ் சிவாஜி ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, விருமாண்டி படத்துக்கு முதல்ல சண்டியர் என்று தான் பெயர் வைத்தோம். அந்த படத்தை பொருத்தவரைக்கும் எங்க ஷூட் பண்ணாலும் தகராறு பண்ணாங்க. படத்தை எடுக்கவே விடல. நாங்க ஃபுல்லா கிரவுண்ட் ஒர்க் தான் பாத்துட்டு இருந்தோம். கடைசில கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் குள்ள மதராஸா இடத்தில் ஷூட்டிங் பண்ணனும்.

   

 

படத்த நாங்க ரிவர்ஸ்ல இருந்து தான் எடுத்தோம். ஆர்ட் டைரக்டர் பிரபாகரன் இங்கு ஒரு செட்டு போடும்போது அடுத்த இடத்தில் செட் போடுவாரு. இப்படி மாத்தி மாத்தி எல்லாமே உல்டாவா பண்ணி தான் படத்தை எடுத்தோம். ஜல்லிக்கட்டு அந்தந்த ஆளுங்கள வர வச்சு செட்டு போட்டு எடுத்தோம். விருமாண்டி நாங்க ஃபர்ஸ்ட் லைவ் சவுண்ட் ஷூட் பண்ணும் போது காலைல ஒரு சீன் சூட் பண்ணி முடிச்சிட்டோம். அந்த ஜெயில் சீன் பார்த்தால் சவுண்ட் ரெக்கார்ட் ஆகவே இல்ல.

அதுக்கப்புறம் திருப்பி மத்தியானம் அதே சீன் ஷூட் பண்ணாரு. அதுக்கு அவருக்கு கோபம் வரல. அதுக்கப்புறம் வந்து ஏதோ கூப்பிட்டு எக்யூப்மென்ட் எல்லாம் மாத்தி மத்தியானம் திருப்பி அதே ரோகினி, பசுபதி, கமல் சார் சீன் நாங்க திருப்பி சூட் பண்ணினோம். கமல் சார் கூட இருந்து ஒர்க் பண்ணியது என்னோட பாக்கியம். அவர் கூட உட்கார்ந்து செட்யூல் பண்றது எல்லாம் பெரிய விஷயம் என பேசி உள்ளார்.