ஸ்டாலின் தலைமையிலான ஸ்டாப்களின் அரசானது வருடந்தோறும் பொங்கல் பரிசுத்தொகையை வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் 2026 பொங்கலுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இந்த ரொக்கப்பணத்துடன் வழக்கம்போல் வழங்கப்படும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றையும் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
