செம குட் நியூஸ்..! ரூ.5000 ஊக்கத்தொகை… சொத்து வரி செலுத்துவோருக்கு தமிழக அரசு இன்பஅதிர்ச்சி…!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

பெருநகர சென்னை மாநகராட்சி, சொத்து வரி செலுத்துவோருக்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026-27-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் (இன்றைக்குள்) செலுத்தும் உரிமையாளர்களுக்கு, வரியில் 5% கட்டணச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் வரி செலுத்துவோர் அதிகபட்சமாக ₹5,000 வரை மிச்சப்படுத்த முடியும் .

இந்தச் சலுகையைப் பெறுவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால், சென்னைவாசிகள் இதனைப் பயன்படுத்தி வரிச் சேமிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களது சொத்து வரியை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்றோ உடனடியாகச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் வரி செலுத்தி இந்த அரசு வழங்கியுள்ள நிதிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது.