தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மாநிலத்தின் நிதி நெருக்கடியைச் சீரமைத்து ‘வெற்றித் தமிழகம்’ என்ற தொலைநோக்குத் திட்டத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் 10,000 பள்ளிகளை மேம்படுத்தும் ‘சூப்பர் க்ளீன்’ திட்டம், காமராஜர் சிறப்புப் பள்ளிகள், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பாடத்திட்ட மறுசீரமைப்பு போன்ற பல்வேறு புதுமையான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய இலவச மிதிவண்டிகள் வழங்க ரூ.277 கோடியும், கல்லூரி மாணவர்களுக்காக ரூ.2,000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், புதிய தொழில்பயிற்சி மையங்கள் மற்றும் பொது நூலகங்களை டிஜிட்டல் முறையாக்குதல் எனப் பல முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் இந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…