கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர் K.A.S. அவர்கள், தமிழகப் பெண்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரூ. 2,500 மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் சரியான நேரத்தில் தகுந்த முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று மிகக் குறுகிய காலமே ஆகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிப்பது ஆகிய முக்கியப் பணிகளில் முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதே சந்திப்பில், அதிமுகவினர் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் ரீதியான கேள்விக்கு பதிலளிக்க நிதியமைச்சர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…