கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர் K.A.S. அவர்கள், தமிழகப் பெண்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரூ. 2,500 மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் சரியான நேரத்தில் தகுந்த முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று மிகக் குறுகிய காலமே ஆகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிப்பது ஆகிய முக்கியப் பணிகளில் முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதே சந்திப்பில், அதிமுகவினர் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் ரீதியான கேள்விக்கு பதிலளிக்க நிதியமைச்சர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…