Connect with us

CINEMA

இதுதாங்க உண்மை… விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா… அவரே வெளியிட்ட புகைப்படம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது.

   

பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகி ஆக நடிகை பிரியங்கா நல்காரி நடித்தார்.

தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகை பிரியங்கா. இவர் தனக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார். இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந்துபாதியிலேயே விலகி விட்டார்.

தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி என்ற  சீரியலில் நடிகை பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை காதல் செய்து வந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. ஆனால் திருமணம் நடக்காமல் நின்றுபோனது. அந்த நேரத்தில் திடீரென மலேசியாவில் அவரது திருமணம் நடந்து முடிந்தது.

அதில் அவரது பெற்றோர் கூட கலந்து கொள்ளவில்லை. திருமணம் முடிந்து ஓராண்டு கூட முடியாத நிலையில் தற்போது அவர்கள்  பிரிந்துவிட்டார்கள்  என செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அவரும் கணவர் உடன் போட்டோக்களை நீக்கியது மட்டுமின்றி சோகமாக இன்ஸ்டா ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருந்தார். இதனால் விவாகரத்து ஆனது உண்மைதான் என அனைவரும் நினைத்தனர். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை தனது கணவர் உடன் கொண்டாடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Continue Reading

More in CINEMA

To Top