CINEMA
இயக்குனர் பாலு மகேந்திரா மேல் கோபமாக இருந்தாரா எம் ஜி ஆர்? மேடையில் கையைத் தட்டிவிட்டது ஏன்?
தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். இந்த தற்கொலைக்குப் பின்னணியில் பாலு மகேந்திரா இருந்ததாக அப்போது சில பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. தேசிய விருது பெற்ற நடிகை என்பதாலும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும் ஷோபா மீது எம் ஜி ஆருக்கு மிகுந்த அன்பாக இருந்தாராம்.
அதனால் ஷோபாவின் தற்கொலை அவரை வெகுவாக பாதித்ததாம். அப்போது எம் ஜி ஆர் முதல்வராக இருந்த நிலையில் பாலு மகேந்திரா இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்கு எம் ஜி ஆர் உதவி செய்ததாகவும் பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கள் வந்தன. இது எம் ஜி ஆருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒரு சினிமா நிகழ்ச்சி மேடையில் எம் ஜி ஆர் தன்னருகில் வந்து நின்ற பாலுமகேந்திராவின் கையைத் தட்டிவிட்டுவிட்டு நகர்ந்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் மிகச்சிறந்த கலைஞனான பாலு மகேந்திரா மீது அவருக்கு எந்த கோபமும் இல்லை என்றும் திரையுலகைச் சேர்ந்த பலர் கூறியுள்ளனர். ஒரு விழாவில் பாலு மகேந்திரா எம் ஜி ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோக் காட்சி இப்போதும் இணையத்தில் உள்ளது.