கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணி டைரக்சனில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா.பிறகு ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்துக்கொண்ட நடிகை ரோஜா தனது சொந்த ஊரான ஆந்திராவில் செட்டிலானார். அப்போது ஆந்திரா அரசியலில் ஆர்வம் காட்டிய ரோஜா ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த போது விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
ரோஜா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிற மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் 125 படங்களுக்கு மேல் நடித்த ரோஜா, கடந்த 10 ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடிக்காமல் அரசியல் சார்ந்த பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் அவர் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகை ரோஜா ரீ என்ட்ரி தருகிறார். தமிழில் லெனின் பாண்டியன் என்ற படத்தில் நடிகை ரோஜா இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் ஜமா என்ற படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் இயக்கி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும் நடிகை ரோஜா முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். 1990களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜா இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி தருவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…