இப்போதைக்கு அரசியல் எதுவும் வேணாம்பா… மீண்டும் தமிழ் சினிமா களத்துக்கு வந்த மாஜி கதாநாயகி… உற்சாகத்தில் ரசிகர்கள்!

By Elango on மார்கழி 30, 2025

Spread the love

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணி டைரக்சனில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா.பிறகு ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்துக்கொண்ட நடிகை ரோஜா தனது சொந்த ஊரான ஆந்திராவில் செட்டிலானார். அப்போது ஆந்திரா அரசியலில் ஆர்வம் காட்டிய ரோஜா ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த போது விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

ரோஜா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிற மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் 125 படங்களுக்கு மேல் நடித்த ரோஜா, கடந்த 10 ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடிக்காமல் அரசியல் சார்ந்த பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் அவர் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்.

   

தமிழ் சினிமாவில் நடிகை ரோஜா ரீ என்ட்ரி தருகிறார். தமிழில் லெனின் பாண்டியன் என்ற படத்தில் நடிகை ரோஜா இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் ஜமா என்ற படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் இயக்கி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும் நடிகை ரோஜா முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். 1990களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜா இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி தருவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.