Categories: சினிமா

ரகுவரனை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்.. முதல்முறையாக மனம் திறந்த ரோகினி..!

Spread the love

வில்லன் என்றாலே அது ரகுவரன் தான் என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்தவர் தான் ரகுவரன். பிரபலங்களுக்கு வில்லனாக இவர் வந்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. பாட்ஷா மற்றும் அண்ணாமலை என பெரும்பாலான ரஜினி படங்களில் இவர் நடித்திருப்பார். குறிப்பாக பாட்ஷா திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. மலையாள படம் காக்கா படத்திலேயே வில்லனாக அறிமுகமாகி இருந்தார். பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக நடித்த தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில் ரகுவரன் நிரூபித்தார்.

அதனைத் தொடர்ந்து அதே வருடம் 1982 ஆம் ஆண்டு தமிழில் ஏழாம் மனிதன், ஒரு ஓடை நதியாகிறது, நீ தொடும் போது, முடிவல்ல ஆரம்பம், எங்கிருந்தாலும் வாழ்க, மீண்டும் பல்லவி, மைக்கேல் ராஜ், கூட்டுப் புழுக்கள் மற்றும் கவிதை பாட நேரமில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் ரகுவரன் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண்மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன 8 வருடத்தில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் தங்களுடைய விவாகரத்து குறித்து ரோகினி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், எனக்கு 13 வயசு இருக்கும் அப்போ ரகுவரனுக்கு 24 வயசு. அப்பவே நண்பர்களாக நாங்க பேசி பழகிட்டோம். 13 வருஷம் கழிச்சு தான் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் ஏழு வருஷத்துல நிறைய நடந்துச்சு. ஒரு ரசிகையா ரகுவரனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதே சமயம் என் மகன் என் மூலம் கிடைத்ததால் ரகுவரனுக்கு என்னை மிகவும் பிடித்தது.

ஆனால் சில காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அதற்கான உண்மை காரணம் என்ன என்று என் மகனுக்கு மட்டும்தான் தெரியும். அதை நான் பொதுவெளியில் சொல்லவும் விரும்பவில்லை. நான் ஏதாவது சொல்லி அது தவறு என்று சண்டை போடுவதற்கு அவரே இங்கு இல்லை. அவர் பற்றி ஏதாவது சொல்லி அவருடைய பெயரை நான் களங்கப்படுத்த விரும்பவில்லை. நடந்த உண்மை எல்லாம் நடந்தது தான். அது எங்களுக்குள் தெரிந்த விஷயமாகவே இருந்துட்டு போகட்டும். என் மகனுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும் என்று ரோகிணி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

30 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

45 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

48 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

52 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

56 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

59 minutes ago