Categories: சினிமா

ரகுவரனை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்.. முதல்முறையாக மனம் திறந்த ரோகினி..!

Spread the love

வில்லன் என்றாலே அது ரகுவரன் தான் என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்தவர் தான் ரகுவரன். பிரபலங்களுக்கு வில்லனாக இவர் வந்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. பாட்ஷா மற்றும் அண்ணாமலை என பெரும்பாலான ரஜினி படங்களில் இவர் நடித்திருப்பார். குறிப்பாக பாட்ஷா திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. மலையாள படம் காக்கா படத்திலேயே வில்லனாக அறிமுகமாகி இருந்தார். பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக நடித்த தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில் ரகுவரன் நிரூபித்தார்.

அதனைத் தொடர்ந்து அதே வருடம் 1982 ஆம் ஆண்டு தமிழில் ஏழாம் மனிதன், ஒரு ஓடை நதியாகிறது, நீ தொடும் போது, முடிவல்ல ஆரம்பம், எங்கிருந்தாலும் வாழ்க, மீண்டும் பல்லவி, மைக்கேல் ராஜ், கூட்டுப் புழுக்கள் மற்றும் கவிதை பாட நேரமில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் ரகுவரன் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண்மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன 8 வருடத்தில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் தங்களுடைய விவாகரத்து குறித்து ரோகினி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், எனக்கு 13 வயசு இருக்கும் அப்போ ரகுவரனுக்கு 24 வயசு. அப்பவே நண்பர்களாக நாங்க பேசி பழகிட்டோம். 13 வருஷம் கழிச்சு தான் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் ஏழு வருஷத்துல நிறைய நடந்துச்சு. ஒரு ரசிகையா ரகுவரனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதே சமயம் என் மகன் என் மூலம் கிடைத்ததால் ரகுவரனுக்கு என்னை மிகவும் பிடித்தது.

ஆனால் சில காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அதற்கான உண்மை காரணம் என்ன என்று என் மகனுக்கு மட்டும்தான் தெரியும். அதை நான் பொதுவெளியில் சொல்லவும் விரும்பவில்லை. நான் ஏதாவது சொல்லி அது தவறு என்று சண்டை போடுவதற்கு அவரே இங்கு இல்லை. அவர் பற்றி ஏதாவது சொல்லி அவருடைய பெயரை நான் களங்கப்படுத்த விரும்பவில்லை. நடந்த உண்மை எல்லாம் நடந்தது தான். அது எங்களுக்குள் தெரிந்த விஷயமாகவே இருந்துட்டு போகட்டும். என் மகனுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும் என்று ரோகிணி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

22 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

34 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

41 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

49 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

56 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

1 மணத்தியாலம் ago