இயக்குனர் ஆர்.கே செல்வமணி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு விஜயகாந்த் வைத்து புலன் விசாரணை படத்தை இயக்கி இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கேப்டன் பிரபாகரன், பொன்விலங்கு, செம்பருத்தி, கண்மணி, ராஜ முத்திரை உள்ளிட்ட படங்களை எழுதி இயக்கினார். கடந்த 22 ஆம் ஆண்டு நடிகை ரோஜாவை ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகளும் இருக்கின்றனர். சமீபத்தில் ஆர் கே செல்வமணி அளித்த பேட்டியில் கூறியதாவது, நிறைய பேர் என்கிட்ட கேட்டிருக்காங்க. ரோஜாவை பார்த்து உங்க மனைவியா வர போறாங்க. நீங்க அவங்கள இவ்வளவு சின்சியரா படத்துல நடிக்க வைக்கிறீங்கன்னு. அப்போ இன்னொருத்தன் பொண்டாட்டிய அப்படி நடிக்க வைக்கலாமா?
![PICS INSIDE] Director R.K.Selvamani's photos from wife Roja's birthday celebration go viral](https://i.zoomtventertainment.com/story/Rk_selvamani.jpg)
நான் பண்றது தப்புனா அது பண்ண கூடாதுன்னு சொல்லணுமே தவிர உன் பொண்டாட்டிய நடிக்க வைக்க கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம். ரோஜா சிரஞ்சீவி, ரஜினிகாந்த்தோட படம் பண்ணிருக்காங்க. இங்க ராம்கியோட நடிக்கிறாங்க. யாரா இருந்தாலும் அவங்க நடிக்க தான் போறாங்க. யாரா இருந்தாலும் சம்பளம் கொடுக்க போறோம். அவங்கள ஒன்னும் கல்யாணம் பண்ணல. கதை புடிச்சிருக்கு. டைரக்டர் புடிச்சிருக்கு.

யாரோட நடிச்சாலும் சரிதான்னு ரோஜா யோசிப்பாங்க. சில நேரங்களில் ஒரு சில படங்களை ரோஜா மிஸ் பண்ணதுக்கு அவங்களோட ஆட்டிடியூடும் காரணம். ஏறக்குறைய எனக்கும் உங்களுக்கு ஒரே ஆட்டிட்யூட் தான். இதே மாதிரி தான் அரசியலையும். ரோஜா எதனாலும் போல்டா பேசுறது, அதுக்கு என்ன விளைவாக இருந்தாலும் அதை சமாளிக்க தயாரா இருக்கிறாங்க. அது சில நேரம் பிலஸ்ஸா இருக்கும். சில நேரம் மைனசா இருக்கும் என கூறியுள்ளார்.

