நடிகை ஜாஸ்மின் பாசின் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக வானம் திரைப்படத்தில் நடித்தார். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் ஜாஸ்மின் பாஸின் நடித்துள்ளார். டிவி சீரியல்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல் என ஜாஸ்மின் பாஸின் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 17-ஆம் தேதி டெல்லியில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் ஜாஸ்மின் பாஸின் பங்கேற்றார்.
அப்போது கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் போட்ட பிறகு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை இருந்ததால் கண் எரிச்சலைப் பொறுத்துக் கொண்டு கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு ரேம்ப் வாக் செய்துள்ளார். சிறிது நேரத்தில் கண் பார்வை தெரியாமல் சிரமப்பட்டுள்ளார்.
உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உதவியுடன் ஜாஸ்மின் பாஸின் மருத்துவரை சென்று பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அவரது கண்களை பரிசோதனை செய்த டாக்டர் Carneal டேமேஜ் ஏற்பட்டுள்ளதாக கூறி இரண்டு கண்களுக்கும் கட்டு போட்டுள்ளனர். அதன் பிறகு ஜாஸ்மின் மும்பைக்கு வந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்போது கண் பார்வை சரியாகி வருகிறது எனவும், உங்களது அன்புக்கு நன்றி எனவும் ஜாஸ்மின் பாஸின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு லென்ஸ் போட்டதால் கண் பார்வைக்கு பிரச்சனையாகி நடிகை சிரமப்பட்டதை அறிந்த திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.