காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி REST செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வார விடுமுறையை உறுதி செய்வதே அதன் நோக்கம். கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை ஒரு காவலரின் வார விடுமுறை காவல் ஆய்வாளரால் நிராகரிக்கப்பட்டால், அது நேரடியாக டி.எஸ்.பி.யின் கவனத்திற்குச் செல்லும்.
டி.எஸ்.பி.யும் விடுமுறையை நிராகரித்தால் அது எஸ்.பி.யின் கவனத்திற்குச் செல்லும் வகையில் வடிவமைப்பு முக்கியப் பணிகளுக்காக ஒரு காவலர் வார விடுமுறை எடுக்க முடியாமல் போனால், வேறொரு நாளில் எடுத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காவலர்களின் வார விடுமுறையை முறைப்படுத்த கன்னியாகுமரியில் தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
