தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கோவை மணி (69) அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் கோவை மணி அவர்கள் தமிழ் சினிமாவில் ‘பாட்டாளி மகன்’, ‘விக்னேஷ்வர்’, ‘மிஸ்டர் மகாராணி’, மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மாசி’ உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், இவர் நடிகர் அர்ஜுனின் மேலாளராகவும் (Manager) நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்
தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, கடந்த மே 10-ஆம் தேதி புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற…
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர்…
பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற காண்டீரவா விளையாட்டு மைதானத்தில் இயங்கி வரும் தனியார் குத்துச்சண்டை கிளப்பில், 17 வயது இளம் வீராங்கனைக்கு…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி, ஓடும் லாரியில்…
ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனு (21). சிறந்த பேட்மிண்டன் வீரரான இவர், பள்ளி…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஸ்டீபன் கோல்பர்ட்டை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுவது போன்ற செயற்கை…