திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலாளரான மீனா ஜெயக்குமார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கோவையைச் சேர்ந்த இவர், கடந்த தேர்தல்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த விலகல் முடிவை அவர் தனது அதிகாரப்பூர்வ ‘X’ (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாகப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் இவர் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸை நேரில் சந்தித்துப் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருந்தது. அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தற்போது அவர் திமுகவிலிருந்து விலகியிருப்பது, அவர் விரைவில் அதிமுக அல்லது மாற்று அரசியல் கட்சியில் இணையக்கூடும் என்ற பலத்த எதிர்பார்ப்பையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர், தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும்…
கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை…
ஐபிஎல் 2026 தொடரில், பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 55 ரன்கள்…
நடிகை சோனா 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஷாஜகான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரௌடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகக் காவல் துறை…
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது…