மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‘VB-G RAM G’ திட்டத்திற்கான முதற்கட்ட தவணை நிதியான ரூ.25,863 கோடியை அதிகாரப்பூர்வமாக விடுவித்துள்ளார். போபாலில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியொன்றில் இந்த நிதியை ஒதுக்கீடு செய்து பேசிய அவர், இத்திட்டத்தின் செயல்பாடுகளில் எவ்வித முறைகேடுகளுக்கோ அல்லது மோசடிகளுக்கோ சிறிதும் இடமில்லை என்றும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பணிகள் தொய்வின்றி நடைபெறும் என்றும் திட்டவட்டமாக உறுதியளித்தார்.
நடப்பு மாதம் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த புதிய திட்டம் முறைப்படி அமலுக்கு வந்துள்ள நிலையில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இதற்கான பணிகள் நாடு முழுவதும் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளன.
