சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் சுருதியை காணவில்லை என்று முத்துவும் மீனாவும் அங்கும் இங்கும் தேடி அலைகின்றனர். பார்ட்டிக்கு வந்த அனைவரும் ஸ்ருதி எங்கே எங்கே என்று கேட்பதால் ரவி மிகுந்த டென்ஷன் உடன் இருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் ஸ்ருதி லாயரை பார்க்க சென்று இருப்பதாக அவர் தோழி கூறியதை கேட்டு அங்கே முத்துவும் மீனாவும் செல்கின்றனர். சுருதி அவர்களை பார்த்ததும் நான் டைவர்ஸ் அப்ளை பண்ண போறேன் என்று கூறுகிறார்.
உடனே முத்துவும் மீனாவும் நிலைமையை எடுத்து சொல்லி ரவி எந்த தவறும் செய்யவில்லை அவங்க ஓனர் கீழ விழுந்துட்டாங்க அவங்களால நடக்க முடியல அவங்கள தூக்கிட்டு வந்ததுதான் நீங்க தப்பா நினைச்சுக்கிட்டீங்க. பாவம் ரவி அங்க பார்ட்டி நடக்குற இடத்துல ரொம்ப டென்ஷனா உங்களை தேடிட்டு இருக்காரு என்று புரிய வைக்கின்றனர். உடனே ஸ்ருதி அப்படியா தான் தப்பு பண்ணிட்டேன் என்று ஒப்புக்கொள்கிறார். பிறகு அங்கிருந்து மூவரும் கிளம்புகின்றனர்.
பார்ட்டி நடக்கும் இடத்தில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அண்ணாமலையும் சுருதி இப்படி வராமல் இருக்க மாட்டா என்ன நடந்தது உண்மையை சொல்லு என்று ரவியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் சுருதி இந்த மாதிரி பங்க்ஷனுக்கு முதல் ஆளா வந்துடுவா இப்ப போன் கூட சுவிட்ச் ஆப்ல வேற இருக்கு எங்க கிட்ட உண்மைய சொல்லுங்க என்று எல்லோரும் ரவியை சூழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் கரெக்டாக சுருதியை கூட்டிக்கொண்டு முத்துவும் மீனாவும் வந்து விடுகின்றனர். சுருதியை பார்த்தவுடன் ரவி மிகுந்த சந்தோசம் அடைந்து விடுகிறார். பிறகு ஸ்டேஜ்க்கு சென்று சந்தோஷமாக கேக் கட் செய்து தங்களது காதலைப் பற்றியும் முத்து மீனா எப்படி தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர் என்பதை பற்றியும் பேசுகின்றனர். குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறது. பின்னர் பாட்டு கச்சேரி நடக்கிறது. சந்தோஷமான தருணங்களை குடும்பத்தினர் பகிர்ந்து கொள்கிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…
சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் 'கோ-பே' (Copay) மற்றும் 'டிசீஸ் கேப்' (Disease Cap)…