“அரசு மருத்துவமனை படுக்கையில் ரத்தக் களம்”…. தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைக் கொடூரமாகக் கடித்த எலி… திருச்சியை நள்ளிரவில் உலுக்கிய சம்பவம்….!

Spread the love

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை அதிகாலையில் எலி கடித்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்கொடி (60) என்பவர், எலும்பு முறிவு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை வார்டுக்குள் சுற்றித் திரிந்த எலி ஒன்று, கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்துள்ளது. வலியால் அவர் அலறியதையடுத்து, அங்கு வந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, எலிக்கடிக்கான தடுப்பூசியைச் செலுத்தினர்.

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரமற்ற சூழலும் பராமரிப்பின்மையும் தொடர்கதையாகி வருவதற்கு இச்சம்பவம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலை எலி குதறிய கொடூரம் அரங்கேறியது. அத்தகைய அதிர்ச்சி சம்பவங்களில் இருந்து பாடம் கற்காமல், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகளிலேயே எலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது நோயாளிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ஒருபுறம் மருத்துவமனையில் நோயாளி எலியால் கடிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில், இச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்த செய்தி வெளியாகி மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. அடிப்படைச் சுகாதாரத்தையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு, இத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பலத்த கோரிக்கையாக உள்ளது.

Nanthini

Recent Posts

பகீர்…! ரீல்ஸ் ஆசையால் நேர்ந்த விபரீதம்… 200 அடி கொழுக்குமலை பள்ளத்தில்… தவறி விழுந்த சென்னை இளைஞர்… மீட்கப்பட்ட வாலிபரின் திக் திக் நிமிடங்கள்…!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக, சென்னை அருகே உள்ள…

4 minutes ago

“ஒரு சாமியார் போல மாறினார்”…. காட்டிற்குள் சென்று எச்.வினோத் செய்த காரியம்… இயக்குநர் உடைத்த ரகசியம்…. ‘ஜனநாயகன்’ படக்குழுவை அதிரவைத்த சம்பவம்….!

தளபதி விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள…

7 minutes ago

“200 கோடி எங்கே போச்சு?”… காலை உணவுத் திட்டத்தின் பின்னணியில் நடப்பது என்ன?… தமிழ்நாடு அரசின் பரபரப்பு முடிவு…. அரசால் வெளியான அதிர்ச்சி நிதி விவரங்கள்..!

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத்…

16 minutes ago

“டிப்ளமோ / B.Sc படுச்சுருந்தா போதும்…” இந்தியன் ரயில்வே தரும் மெகா ஆஃபர் … மாசம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் என்ஜினியர், டெப்போ கண்காணிப்பாளர் மற்றும் வெல்டர் ஆகிய 4,098 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

19 minutes ago

“அடச்சீ… ஜோடிகளை வேவு பார்க்க… ஸ்மார்ட் சிட்டியில்… நள்ளிரவில் கேபிளை வெட்டி சிக்கிய இளைஞர்… சொன்ன பகீர் பின்னணி…!”

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரை, குடும்பங்களும் காதல் ஜோடிகளும் பொழுதைக் கழிக்கும் அழகிய இடமாகத்…

22 minutes ago

BREAKING: அதிமுகவின் இளம் ரத்தம் விலகல்…. கொங்கு மண்டலத்தில் கதறும் தொண்டர்கள்…. இபிஎஸ்-க்கு விழுந்த மரண அடி….!

அதிமுகவின் இளம் தலைவர்களுள் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கியத் தூணாகவும் பார்க்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர்…

30 minutes ago