முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா கூட்ட நெரிசலில் சிக்கி சங்கடத்திற்கு உள்ளான வீடியோ ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர்.தற்பொழுது அவர் விஜயுடன் இணைந்து ‘ வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் .
இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தற்சமயம் அவர் மும்பையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார் .அங்கு கூட்டத்திலிருந்து ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயன்றனர். சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரிடம் தகாத முறையில்,அவருடைய உடல் அங்கங்களை தொடும்படி நடந்து கொண்டுள்ளனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தினால் பாதுகாவலர்களாக கட்டுப்படுத்த முடியவில்லை. சாமி கும்பிட வந்த ராஷ்மிகா மந்தனா உடனடியாக பாதுகாவலர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றுவிட்டார். ரசிகர்கள் இவ்வாறு எல்லை மீறி நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த வீடியோ தற்பொழுது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் கிட்ட கொடுத்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித்…
தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை…