முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா கூட்ட நெரிசலில் சிக்கி சங்கடத்திற்கு உள்ளான வீடியோ ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர்.தற்பொழுது அவர் விஜயுடன் இணைந்து ‘ வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் .
இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தற்சமயம் அவர் மும்பையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார் .அங்கு கூட்டத்திலிருந்து ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயன்றனர். சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரிடம் தகாத முறையில்,அவருடைய உடல் அங்கங்களை தொடும்படி நடந்து கொண்டுள்ளனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தினால் பாதுகாவலர்களாக கட்டுப்படுத்த முடியவில்லை. சாமி கும்பிட வந்த ராஷ்மிகா மந்தனா உடனடியாக பாதுகாவலர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றுவிட்டார். ரசிகர்கள் இவ்வாறு எல்லை மீறி நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த வீடியோ தற்பொழுது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…