Categories: சினிமா

சொல்றது கரெக்ட்தான்… ஆனா அது வெற்றிமாறனுக்காக சொன்னதா?… அப்படி என்ன சொன்னார் ராஜீவ் மேனன்?

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் நான்கு ஆண்டுகளாக உருவாக்கி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள பல நடிகர்களின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆனால் படம் வசூல் ரீதியாக தோல்விப்படம் என சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் வெற்றிமாறன் அதிக நாட்கள் ஷூட் செய்து படத்தின் பட்ஜெட்டை இழுத்து விட்டதுதான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகராக அறிமுகமான இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர்கைளின் முன்திட்டமிடல் இல்லாமைக் குறித்து கண்டித்து பேசியுள்ளார். அதில் “இயக்குனர்கள் திட்டமே இல்லாமல் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நடிகர்களைத் தங்கள் கூடவே ‘ட்ராவல்’ பண்ண வேண்டும் என்கிறார்கள். என்ன ட்ராவல்?.. இது ஷூட்டிங் பாஸ். ஒவ்வொரு நாளும் தயாரிப்பாளரின் பணம் காலியாகிக் கொண்டு இருக்கிறது. எனக்கு சிந்தனை வரும்போது எடுப்பேன் என்று சொல்வதால் சரியல்ல.

அதெல்லாம் பழைய கால நிலவுடைமை சிந்தனை. இயக்குனர்கள் படம் கமிட்டானதும் தனக்கு பேர் வர வேண்டும் என நினைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் இருக்கும் எல்லா உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் அதிகமாக பாதிக்கப்பட போவது தயாரிப்பாளர்தான். ஹாலிவுட்டில் ஜுராசிக் பார்க் போன்ற படத்தையே சரியாகத் திட்டமிட்டு 72 நாட்களில் எடுத்து முடிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

அவர் இந்த பேட்டியில் சொல்வதெல்லாம் இயக்குனர் வெற்றிமாறனுக்குதான் பொருந்தும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

 

 

vinoth

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

2 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

2 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

2 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

2 மணத்தியாலங்கள் ago