Categories: சினிமா

அந்த ஒரு காரணத்தால் சினிமாவை விட்டே விலக நினைத்த ரஜினிகாந்த்… அட்வைஸ் சொல்லி சமாதானம் செய்த சிவகுமார்!

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.

ரஜினிகாந்த் நடிகர் சிவகுமாருடன் இணைந்து நடித்த திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி. அந்த படத்தில் ரஜினிகாந்த் நல்லவராகவும், சிவகுமார் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது சிவகுமார் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த் அவரிடம் ‘நான் சினிமாவை விட்டே விலகிவிடலாம் என நினைக்கிறேன்’ என்ற அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.

அதற்குக் காரணமாக ‘நான் இப்போது தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கிறேன். ஆனால் எனக்கு இரண்டு மொழியுமே சரளமாக பேசவரவில்லை. அதனால் நான் சினிமாவை விட்டே போய்விடலாமா என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட சிவகுமார் “ஆரம்பத்தில் அப்படிதான் இருக்கும். போக போக பழகிவிடும். நீங்கள் வருத்தப்படாமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துங்கள்” என அறிவுரைக் கூறி அனுப்பியுள்ளார்.

அவர் அறிவுரையைக் கேட்ட ரஜினிகாந்த் அடுத்த சில ஆண்டுகளிலேயே உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்தார். ஹாலிவுட்டில் கூட ஒரு படம் நடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் வித்தியாசமான டயலாக் உச்சரிப்பே ஒரு தனி ஸ்டைலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

7 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago