சீரீயஸ் காட்சியில் மாட்டிக்கொண்ட சந்தானம்! கலாய்த்து தள்ளிய ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டார் இவ்வளவு ஜாலியான ஆளா?

By Arun

Published on:

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடி ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் முலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த சந்தானம், “பேசாத கண்ணும் பேசுமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர்.

அதனை தொடர்ந்து “காதல் அழிவதில்லை”, “மன்மதன்” போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கிய சந்தானம், முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

   

“அறை எண் 305-ல் கடவுள்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக கலக்கிய சந்தானம், அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக மட்டுமே நடிக்கத் தொடங்கிய சந்தானம். சமீபத்தில் கூட “டிடி ரிட்டன்ஸ்”, “80ஸ் பில்ட் அப்”, “வடக்குப்பட்டி ராமசாமி” போன்ற திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்தார்.

சந்தானம் மிகத் தீவிரமான ரஜினி ரசிகர் என்று கூறுவார்கள். அவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் “எந்திரன்”. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் சந்தானம் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது “எந்திரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் ஒரு சீரீயஸ் காட்சியில் நடிக்க வேண்டியதாக இருந்ததாம். அந்த காட்சியில் சந்தானம் நடிப்பதற்கு சிரமப்பட்டாராம். அப்போது ரஜினிகாந்த் சந்தானத்திடம் “காமெடி காட்சில மட்டும் சர சரன்னு பேசுற, சீரீயஸ் சீன்ல மாட்டிக்கிட்ட பாத்தியா” என்று கலாய்த்துவிட்டு சிரித்தாராம். மேலும் படப்பிடிப்பின்போது சந்தானம் நகைச்சுவையாக எதாவது கலாட்டா செய்தால் ரஜினிகாந்தும் அவருடன் சேர்ந்து கலாய்ப்பாராம். இது குறித்து சந்தானம் ஒரு பேட்டியில் பேசியபோது “ரஜினிகாந்த் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அதே நேரம் ரொம்ப ஸாஃப்ட்” என்று கூறினாராம் சந்தானம்.

author avatar