சமீபத்தில் மறைந்த ஏவிஎம் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் படத்திறப்பு விழா சென்னை ஏவிஎம் பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, சரவணன் சார் எனக்கு தனிப்பட்ட முறையில் பல நன்மைகளை செய்தவர். கோடம்பாக்கத்தில் எனக்கு ஒரு இடம் இருந்தது. அதை சும்மா விடக்கூடாது என்று சொல்லி அவரே பிளான் பண்ணி கொடுத்து ராகவேந்திரா திருமண மண்டபம் கட்ட வைத்தார். போயஸ் கார்டனில் என் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய இடம் இருந்தது. நான் சினிமாக்காரன் என்பதால் அதற்கு 10 மடங்கு விலை சொன்னார்கள். அதனால் நான் சுவர் கட்டி வைத்திருந்தேன். என் வீட்டுக்கு ஒரு முறை வந்த சரவணன் சார் அந்த இடத்தை அதிக விலை என்றால் கூட வாங்கி விடுங்கள். மற்றவர்கள் வந்தால் பிரச்சனை. நீங்கள் வருத்தப்படுவீங்க என்றார். நான் அதைச் செய்தேன். சிவாஜி படத்துக்கு பிறகு ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க. அது உடம்புக்கு மனசுக்கு நல்லது என்றார். அதை இப்பவும் கடைப்பிடிக்கிறேன்.
அசையும் சொத்து அசையா சொத்து என்பார்கள். அசையாத சொத்துக்கு விலை ஜாஸ்தி. நம் மீது அக்கறை கொண்டவர்கள் நம்மை விரும்புகிறவர்கள் அசையா சொத்துகள்தான். கே பாலசந்தர் சோ பஞ்சு அருணாசலம் ஆர்எம் வீரப்பன் கலைஞர் சரவணன் என பலர் அப்படி இருந்தார்கள். நம் மீது அன்பு கொண்டவர்களை காலம் சீக்கிரம் கொண்டு போய் விடுகிறது. பேர் புகழ் குழந்தைகள் சொத்து எல்லாம் இருந்தாலும் நல்ல மனிதர்கள் போகும் போது அனாதையான பீஃல் வருகிறதுஎன்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
பிலிப்பைன்ஸில் உள்ள சால்வடார் பெனடிக்டோ பகுதியில் உள்ள ஒரு ரம்மியமான உல்லாச விடுதிக்குச் சுற்றுலா சென்ற ஐந்து நண்பர்கள் கொண்ட…
சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு…
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…