தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பல வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குனராக பல திரைப்படங்களை தயாரித்து உள்ள ஐஸ்வர்யா ரஜினி இறுதியாக தனது தந்தையை வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனைப் போலவே ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் சினிமாவில் தான் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இரண்டு மகள்களும் சினிமாவில் இருக்க ரஜினி தங்களுடைய சொந்த செலவில் பணம் எடுக்க வேண்டாம் என்று இருவருக்குமே பலமுறை அறிவுரை கூறியுள்ளார். இதனை பல மேடை நிகழ்ச்சிகளிலும் கூட ரஜினி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சினிமாவை எல்லாம் ஓரம் கட்டி விட்டு குடும்பத்தை கவனியுங்கள் என்று இரண்டு மகள்களுக்குமே ரஜினி அறிவுறுத்தியபோதும் அவர்கள் தனது தந்தையின் பேச்சைக் கேட்காமல் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படம் போல ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது. இரண்டு அறிமுக சிறுவர்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை அவரே இயக்கி தயாரிக்க உள்ளதாகவும் படத்தின் பூஜை ஏப்ரல் நான்காம் தேதி தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…