தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த ‘மக்கள் நாயகன்’ ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர் தொகுதி முன்னாள் எம்பியாகவும் அறியப்பட்டவர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைத் தனது அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட இவர், சமீபகாலமாக அதிமுகவில் தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) வேட்பாளருக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் அரசியல் மாற்றம் குறித்து விளக்கம் அளித்துள்ள ராமராஜன், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு “நன்றிக்கடன்” என்று குறிப்பிட்டுள்ளார். தனது 45-வது படமான ‘சாமானியன்’ திரையரங்குகளில் சரியாக ரிலீஸ் ஆகாத சூழலில், ஆலங்குளத்தில் உள்ள ஒரு தியேட்டர் உரிமையாளர் தனது வேண்டுகோளை ஏற்று டிக்கெட் விலையை ரூ.50-ஆகக் குறைத்து 115 நாட்கள் அப்படத்தை ஓடச்செய்ததாகக் கூறினார். அந்த இக்கட்டான காலத்தில் தமக்கு பொருளாதார ரீதியாக உதவிய அந்த உரிமையாளரின் சகோதரர் மகனே த.வெ.க வேட்பாளர் என்பதால், அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டதாகத் தெரிவித்தார்.
இதேபோல், மதுரை மேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் மற்றொரு வேட்பாளருக்கும் தாம் பிரசாரம் செய்ய இருப்பதாக ராமராஜன் அறிவித்துள்ளார். 1975-78 காலகட்டத்தில் மேலூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலை பார்த்தபோது, தமக்கு வாழ்வளித்து சினிமாவில் நுழைய உதவிய உரிமையாளரின் மகனுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கினார். தனக்கு வாழ்வளித்தவர்களுக்கும், இக்கட்டான நேரத்தில் உதவியவர்களுக்கும் செய்யும் கைமாறாகவே இதைப் பார்க்க வேண்டுமே தவிர, இதில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய ராமராஜன், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று கூறி தமக்கு விஜய்யின் எதிர்காலம் குறித்துக் கருத்துச் சொல்ல விருப்பமில்லை என்பதை நாசூக்காகத் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் தமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், நன்றிக்கடனுக்காக கட்சி எல்லைகளைக் கடந்து அவர் மேற்கொண்டுள்ள இந்தப் பிரசாரம் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…