Categories: சினிமா

அண்ணாமலை படத்தில் இயக்குனரை நம்பாத ரஜினிகாந்த்… அதுக்கு அவர் சொன்ன காரணம் இதுதான்!

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.

90 களை ரஜினிகாந்த் அவரது சினிமா வாழ்வின் உச்சத்தில் இருந்த நாட்கள் என சொல்லலாம். அந்தளவுக்கு மாஸ் ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒன்றுதான் 92 ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலைத் திரைப்படம். அந்த படத்துக்கு முதலில் இயக்குனராக ஒப்பந்தம் ஆனவர் வசந்த். ஆனால் ரஜினியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலக சுரேஷ் கிருஷ்ணா அந்த படத்தை இயக்கினார்.

இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா “அண்ணாமலை படத்தில் இருந்து வசந்த் வெளியேறிய போது நான் உள்ளே வந்தேன். அதற்கு 2 நாள் கழித்து படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அதற்குள்ளாக நான் என்னை அந்த படத்துக்குள் பொருத்திக் கொள்ள வேண்டி இருந்தது. முதலில் ரஜினி சார் என்னை நம்பவில்லை. ஒருவாரம் கழித்துதான் என் மேல் அவருக்கு நம்பிக்கை வந்தது.

அந்த பாம்புக் காட்சி எல்லாம் படமாக்கிய பிறகுதான் அவர் என்னை நம்பினார். ஒரு நாள் என்னிடம் வந்து சொன்னார் ‘சுரேஷ் முதலில் உன் மேல் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஏனென்றால் நீ பாலச்சந்தர் ஸ்கூலில் இருந்து வந்தவன். அது மட்டும் இல்லாமல் கமல் உன்னை அறிமுகப்படுத்தினார். நீ இயக்கிய படங்களும் வேறு மாதிரியானவை. ஆனால் என் ரசிகர்கள் ஆர்ப்பாட்டமான படங்களை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போது நீ உன்னை நிரூபித்து விட்டாய் எனக் கூறினார்” என தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

11 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

15 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

23 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

28 minutes ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

43 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

47 minutes ago