#image_title
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
முரட்டுக் காளை திரைப்படம் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.90 களில் தன்னுடைய மாஸின் உச்சத்தை தொட்டார். தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரின் சினிமா புகழ் இருந்தது.
90 களில் அவர் மாஸின் உச்சத்தில் இருந்த போது நடித்த படம்தான் முத்து. இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்த படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரமேஷ் கண்ணா ஒரு நேர்காணலில் இந்த படம் உருவானது பற்றி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “இந்த படத்தின் கதையையே ரஜினி சார்தான் எங்களுக்கு சொன்னார். நாங்கள் அவர் சொன்ன காட்சிகளை எல்லாம் சேர்த்து ஒரு கதையை உருவாக்கி அவரிடம் சொன்னார். கதையைக் கேட்ட அவர் தென்மாவின் கொம்பத்து படத்தின் கேசட்டை எங்களிடம் கொடுத்து ‘இதுதான் நான் சொன்ன படத்தின் கதை’ என்றார்.
அதன் பிறகுதான் நாங்கள் அந்த படத்தைப் பார்த்தோம். ஆனால் அந்த படத்தின் கதைக்கும் எங்கள் கதைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். அந்தளவுக்கு ரஜினி சாருக்கு ஸ்டோரி நாலேட்ஜ் உண்டு” எனக் கூறியுள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…