மலையாளப் படக் கதையை உல்டா பண்ணி சொல்லி ரஜினி எங்களை ஏமாத்திட்டார்… பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா சொன்ன குட்டி ஸ்டோரி!

By vinoth on ஆனி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

   

முரட்டுக் காளை திரைப்படம் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.90 களில் தன்னுடைய மாஸின் உச்சத்தை தொட்டார். தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரின் சினிமா புகழ் இருந்தது.

   

90 களில் அவர் மாஸின் உச்சத்தில் இருந்த போது நடித்த படம்தான் முத்து. இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்த படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரமேஷ் கண்ணா ஒரு நேர்காணலில் இந்த படம் உருவானது பற்றி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

 

அதில் “இந்த படத்தின் கதையையே ரஜினி சார்தான் எங்களுக்கு சொன்னார். நாங்கள் அவர் சொன்ன காட்சிகளை எல்லாம் சேர்த்து ஒரு கதையை உருவாக்கி அவரிடம் சொன்னார். கதையைக் கேட்ட அவர் தென்மாவின் கொம்பத்து படத்தின் கேசட்டை எங்களிடம் கொடுத்து ‘இதுதான் நான் சொன்ன படத்தின் கதை’ என்றார்.

அதன் பிறகுதான் நாங்கள் அந்த படத்தைப் பார்த்தோம். ஆனால் அந்த படத்தின் கதைக்கும் எங்கள் கதைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். அந்தளவுக்கு ரஜினி சாருக்கு ஸ்டோரி நாலேட்ஜ் உண்டு” எனக் கூறியுள்ளார்.