Categories: CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த நடிகரை கட்டிப்பிடித்த ரம்பா.. கோபத்தில் ரஜினி செய்த செயல்.. பலவருட அனுபவத்தை சொன்ன ரம்பா..

சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா நடித்த படம் அருணாச்சலம். 30 நாளில் 30 கோடி ரூபாயை செலவு செய்ய வேண்டும் என்ற வித்யாசமான கதைக்கரு. இந்த படத்தில், விசுவின் மகளாக ரம்பா, ரஜினிக்கு செகரட்டரியாக நடித்திருப்பார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் அருணாச்சலம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரம்பா கூறியதாவது, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது பலரது கனவு. அந்த ஆசை எனக்கும் இருந்தது. சுந்தர் சி போனில் அழைத்து, அருணாச்சலம் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறி வாய்ப்பளித்தார். பெரிய சந்தோஷமாக இருந்தது.

ஐதராபாத்தில் அருணாச்சலம் ஷூட்டிங் நடந்த போது, பக்கத்தில் சல்மான்கான், ஜாக்கி செராப் நடித்த பந்தணன் என்ற இந்தி பட ஷூட்டிங் நடந்தது. அதில் நான் ஜாக்கி செராப்புக்கு தங்கையாகவும், சல்மான்கானுக்கு காதலியாகவும் நடித்தேன். காலையில் ரஜினி படத்திலும், மதியத்துக்கு பிறகு சல்மான்கான் படத்திலும் நடிப்பேன். ரஜினி ஷூட்டிங் பக்கத்து ஷெட்டில் நடப்பதை அறிந்து, சீனியர் நடிகர் என்ற மரியாதை நிமித்தமாக சல்மான்கான், ஜாக்கி செராப் அவரை பார்க்க வந்தனர். அப்போது அங்கிருந்த நான் ஓடிச்சென்று, சல்மான்கான், ஜாக்கி செராப்பை கட்டிப்பிடித்து வரவேற்றேன். ஏனெனில் அதுதான் பாலிவுட்டில் பழக்கம். அது பெரிய நடிகர்களை பார்க்கும்போது மரியாதையாக செய்யும் ஒரு விஷயம்.

அவர்கள் ரஜினியை சந்தித்து பேசிவிட்டு போன பிறகு ரஜினி சார் கோபமாக இருந்தார். கழுத்தில் கட்டியிருந்த துண்டை கழட்டி வீசிவிட்டு சுந்தர் சியிடம் கோபமாக ஏதோ பேசினார். ரம்பாவுடன் இனி நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் போல தெரிந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிருந்த பலரும் என்னையே திரும்பி திரும்பி பார்த்தனர். அங்கிருந்த கேமராமேன் வந்து, ரஜினி சார் கோவிச்சுக்கிட்டார், ஏன் மேடம் இப்படி பண்ணுனீங்க என கேட்க, எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அழுவதை பார்த்து அங்கு ஓடோடி வந்த ரஜினி என்னை சமாதானப்படுத்தினார்.

பின்னர் காலையில் என்ன நடந்தது என அங்கிருந்தவர்களிடம் கேட்டார். அவர்கள் சல்மான்கான் வந்தபோது நான் கட்டிப்பிடித்ததை சொல்ல, இந்தி நடிகர்கள் வந்தா மட்டும் கட்டிப்பிடிச்சு வரவேற்பீங்க, நாங்க தமிழ் நடிகர்கள்னா, சும்மா வணக்கம் சொல்லி போயிடுவீங்க, தள்ளிப்போய் உட்கார்ந்து புக் படிப்பீங்க, ஆனா எங்களை கண்டுக்க மாட்டீங்க, நாளையில இருந்து ஷூட்டிங் செட்டுக்குள்ள வந்தா எல்லாரையும் வரிசையா நிற்க வைப்பேன். நானும் நிற்பேன். எல்லோரையும் கட்டிப்பிடிக்கணும் என கலாட்டா செய்துவிட்டார், என கூறியிருக்கிறார் ரம்பா.

Sumathi
Sumathi

Recent Posts

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

15 hours ago

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…

15 hours ago

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

16 hours ago

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

17 hours ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

17 hours ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

18 hours ago