Categories: CINEMA

“பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஓட்டெல்லாம் ஒரு பொருட்டே இல்ல”.. பிக் பாஸ் குறித்து ஓப்பனாக பேசிய மாஜி போட்டியாளர் அமுதவாணன்..

விஜய் டிவியில் காமெடி ஷோக்கள், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமுதவாணன். தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6ல், அதாவது கடந்த 2022ல் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து முதன்முறையாக சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்து பேசிய அமுதவாணன் கூறியதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள் எந்த திட்டமிடலும் இல்லாமல்தான் நான் போனேன். டாஸ்க்குகளில் விளையாட போறோம். பிக்பாஸ் சொல்வதை செயயப் போறோம். யாராவது நம்மிடம் கோபப்பட்டு பேசினால், பதிலுக்கு நாமும் கோபபட்டு சண்டை போட போறோம் என்ற எண்ணத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் போனேன்.

டிவி சேனல் நடத்தும் போட்டிகளில் கலந்துக் கொண்டு ஜெயிக்க வேண்டும் என்றால், 6 மாதம், 8 மாதம் என்று கஷ்டப்பட்ட வேண்டும். உடம்பை உருக்கி, மூளையை உருக்கி அதற்காக கஷ்டப்பட வேண்டும். அப்படியும் போராடி வெற்றி பெற்றால் பரிசாக அதற்கு ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் தான் தருவார்கள். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் நான் இருந்து 12 லட்சம் ரூபாய் பெற்றேன். இது எனக்கு சந்தோஷம்தான். இந்த பெட்டியை மற்றவர்கள் எடுத்த போது திட்டினார்கள். ஆனால் நான் எடுத்த போது எல்லோருமே என்னை பாராட்டினார்கள்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த டாஸ்க்குகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவன் நான்தான். ஒரே ஒருமுறை என்னை வேண்டும் என்றே நாமினேஷன் செய்து, மக்களிடம் ஓட்டு வாங்க வைத்தனர். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் ஓட்டு வாங்கறதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சண்டை போட வேண்டும் என்று தெரிந்திருந்தால், இன்னும் நிறைய சண்டை போட்டு 50 லட்சம் ரூபாயை வாங்கியிருப்பேன். ஆனால் அப்போது அது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அது அந்த சீசனுக்கு மட்டும்தான். இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டை போட்டால் ஜெயிக்க முடியாது. பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாள் இருந்தேன். எல்லா போட்டிகளிலும் ஜெயித்தேன். கிராண்ட் பினாலே டிக்கெட்டும் வின் பண்ணினேன். 12 லட்சம் ரூபாய் போதும் என்று பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டேன் என்று கூறியிருக்கிறார் அமுதவாணன்.

Sumathi
Sumathi

Recent Posts

விஞ்ஞானத்தில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் சாதனை படைத்த ஜிடி நாயுடு.. ஆங்கிலேயர்களை திரும்பி பார்க்க வைத்த யுத்தி..!

ஜிடி நாயுடு என்று பெருமையாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும்…

1 hour ago

‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலை பாடி அரங்கையே அதிர வைத்த விஜய் சேதுபதி பட நடிகை மடோனா.. வைரலாகும் வீடியோ..!

2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் மடோனா…

2 hours ago

மார்டன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த விக்ரம் பிரபு பட நடிகை.. வைரல் பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் நெடுநல்வாடை டாணக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஞ்சலி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

3 hours ago

ஸ்ரீபிரியாவை காதலித்துவிட்டு, வேறொரு நடிகையை திருமணம் செய்த கார்த்தி.. அடிதடியில் முடிந்த நவரச நாயகன் காதல்.. பிரபலம் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..

'நவரச நாயகன்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலமாக…

3 hours ago

அந்த நடிகையும் இல்ல, இந்த நடிகையும் இல்ல.. ஜீ தமிழ் சீரியலில் ஏற்பட்ட குழப்பம்.. கடைசில எண்டு கார்டு போட்டதுதான் மிச்சம்..!

தமிழ் சினிமாவில் பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் இருக்கும் பல இல்லத்தரசிகள்…

4 hours ago

10,000 கேட்டு இல்லன்னு சொன்ன வத்சலா.. 4 நாட்களுக்குப் பிறகு நடிகை சாந்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நல்ல உள்ளம்..!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்திருக்கும் பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது. கோயம்புத்தூரில் பிறந்து…

5 hours ago