சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய், சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்து, தாமும் சுமார் 3 கி.மீ தூரம் ஓடினார். விழா மேடையில் “ஸ்போர்ட்ஸ எடு ட்ரக்ஸ்-அ விடு” என்ற வாசகத்தை எழுதி அவர் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிலேயே மாரத்தானில் நீண்ட தூரம் ஓடிய தற்போதைய முதல்வர் இவர்தான் என்று அமைச்சர் ஆதவ் பாராட்டிப் பேசினார். இதனால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
இருப்பினும், முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் திரையில் போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகளிலும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான பாடல்களிலும் நடித்துள்ளதை விமர்சகர்கள் நினைவுபடுத்துகின்றனர். நிஜத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதல்வர், திரையில் அதற்கு மாறாகச் செயல்பட்டதை மறுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இதனை முன்வைத்து அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரிபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்த வெச்சு புகை இழுத்தா பவர் கிக்” போன்ற பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் போதைப் பழக்கத்தை ஊக்குவித்த பாவத்திற்கு நீங்கள் 3 கி.மீ அல்ல, 3,000 கி.மீ ஓடினாலும் தீர்வு கிடைக்காது என்று சாடியுள்ளார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் இந்தச் செயலுக்கு, சமூகத்தை சீரழித்ததற்காக முதலில் பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதன் பிறகே போதைக்கு எதிராகப் பேசும் தகுதியைப் பெற முடியும் என்றும் அவர் தனது கண்டனத்தை உரக்கப் பதிவு செய்துள்ளார்.
மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார் வாடி சந்திப்பு பகுதியில், கடந்த ஆகஸ்ட் 30 அன்று அதிவேகமாக வந்த…
ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…
ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துச் சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை தங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர், காலி செய்துவிட்டு…
உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…
பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் சிந்தனையையும் தருகிறது. எதிர்காலம் குறித்த கனவுகளுடன்…
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட படி்ரா கிராமத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூரக் கொலைச் சம்பவம்…