உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச் சிறுவன் ஒருவனும், 11 வயதுச் சிறுவன் ஒருவனும் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களது ‘ஷட்டில் காக்’ எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துள்ளது.
இது தொடர்பாக இரு சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த 11 வயதுச் சிறுவன் திடீரெனத் தான் வைத்திருந்த கத்தியால் 9 வயதுச் சிறுவனின் மார்பில் பலமாகக் குத்தியுள்ளான். கத்திக் குத்துப் பட்டுக் காயமடைந்த சிறுவன், உடனடியாக ரத்தக் காயங்களுடன் அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு முதலுதவி கேட்டு ஓடிச் சென்றுள்ளான்.
ஆனால், மெடிக்கல் ஷாப்பிற்குள்ளேயே அச்சிறுவன் மயங்கிச் சுருண்டு விழுந்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…