தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட படி்ரா கிராமத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகக் குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்த ஜோதி, கடந்த 7 மாதங்களாகத் தாய் எல்லவ்வா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காரில் வந்த கணவன் சுரேஷ், மனைவி ஜோதி மற்றும் மாமியார் எல்லவ்வா ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் மனைவி ஜோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மாமியார் எல்லவ்வாவை மீட்டுச் சிரிசில்லா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மனைவியைக் கொடூரமாகக் கொன்ற சுரேஷ், நேராகச் சிரிசில்லா காவல் நிலையத்திற்குச் சென்று போலீசார் முன் சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…