பொதுவாகவே அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமாகும். ஆனால் சில நேரங்களில் பாதுகாப்பை மீறி சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அதன்படி பீகார் மாநிலம் பூர்ணியா – அராரியா சாலையில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையில் நேற்று ராகுல் காந்தி மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். அவருடன் பலரும் பங்கேற்ற நிலையில் பேரணியின் போது பாதுகாப்பு வளையத்தை உடைத்து ஓடி வந்த நபர் ஒருவர் திடீரென்று ராகுல் காந்தியின் கழுத்தை பிடித்து அவருடைய தோளில் முத்தமிட முயன்றார். உடனே பாதுகாப்பு பணியாளர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.
அந்த இளைஞர் முகத்தில் அறைந்ததும் தாக்கப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ராகுல் காந்தியின் இடது தோளில் முத்தமிட்டதும் மீண்டும் அவரை நோக்கி நகர்ந்ததும் வீடியோவில் தெரிகின்றது. பிறகு பாதுகாப்பு பணியாளர்கள் அவரை கடுமையாக தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு வளையத்தை உடைத்து முக்கிய அரசியல் தலைவரை நெருங்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…