தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவில் ராகவா லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த அவரை நடனப்பள்ளியில் சேர்த்து விட்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குருப் டான்சராக பணியாற்றிய இவர் சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படம் மூலமாக இவருக்கு நடன இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடந்த இயக்குனராக மாஸ் காட்டியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முனி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காஞ்சனா சீரியஸை தொடர்ந்து இயக்கி வருகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா 2 இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இதனிடையே சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இவரால் ஏராளமான குழந்தைகள் இன்று சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவரின் அறக்கட்டளைக்கு பலரும் டொனேஷன் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கிராம ஒன்றில் வசித்து வரும் மக்கள் பல வருடங்களாகவே உப்பு தண்ணீயை குடித்து வந்துள்ளார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் தாராள மனசுடன் லட்சக்கணக்கில் செலவு செய்து அவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு வாட்டர் பில்டர் வைத்து கொடுத்துள்ளார் லாரன்ஸ். இதனையடுத்து அந்த கிராம மக்கள் மகிச்சியோடு அவரை மனதார பாராட்டி வருகிறார்கள்.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…